முகப்பு
சேலம்

இளம்பெண்ணை கடத்திச் சென்ற வழக்கு: தொழிலாளி கைது

எடப்பாடி அருகே இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்ததாக கூலித் தொழிலாளியை சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

எடப்பாடி அருகே இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்ததாக கூலித் தொழிலாளியை சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

எடப்பாடி வட்டம், பக்கநாடு கிராமம், ஆணைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த இளம்பெண் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அய்யனாரப்பன் (35), இளம்பெண்ணை திங்கள்கிழமை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கூலித் தொழிலாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.