சேலம்

எடப்பாடி நகரப் பகுதியில் புதிய சாலை: எம்.எல்.ஏ  நிதியிலிருந்து 12 லட்சம் ஒதுக்கீடு

எடப்பாடி நகரப் பகுதியில் புதிய சாலை அமைக்க எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

DIN

எடப்பாடி: எடப்பாடி நகரப் பகுதியில் புதிய சாலை அமைக்க எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர மன்ற உறுப்பினர் காளியப்பன்.

எடப்பாடி நகராட்சி பகுதியில் புதிய காங்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை அன்று காலை நடைபெற்றது. எடப்பாடி நகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட மூப்பனூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அப்பகுதியில் புதிய காங்கிரீட் சாலை அமைத்திட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, அத்தொகுதியின்  உறுப்பினரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார். 

புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில் நகர்மன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம். முருகன், முன்னாள் நகர மன்ற தலைவர் டி. கதிரேசன் மற்றும் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT