சேலம்

தம்மம்பட்டி: 7 பேரூராட்சிகளில் 26-ஆம் தேதி மறைமுக தேர்தல்

DIN

தம்மம்பட்டி: சேலம் மாவட்டத்தில், 7 பேரூராட்சிகளில், 11 பதவிகளுக்கு வரும் 26 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளில், தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. அதில், அசம்பாவிதங்களை தவிர்க்க பேளூர், நங்கவள்ளி, வனவாசி பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

தம்மம்பட்டி, ஏத்தாப்பூர், காடையாம்பட்டி பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் வருகை 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. கருப்பூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மதியம் 2.30 மணிக்கு நடக்க வேண்டிய துணைத்தலைவர் தேர்தல் நடத்தப்படவில்லை.

அதன்படி, 7 பேரூராட்சிகளில் 4 தலைவர், 7 துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அந்த பதவிகளுக்கான தேர்தல், வரும் 26 ஆம் தேதி நடக்க உள்ளது. தலைவருக்கான மறைமுக தேர்தல் காலை 9.30 மணிக்கும், துணைத்தலைவருக்கான தேர்தல் மதியம் 2.30 மணிக்கும் நடக்க உள்ளது. காவல்துறை பாதுகாப்புடன் நடக்க உள்ள தேர்தலில் தேர்தல் அலுவலர், உதவி அலுவலர், கவுன்சிலர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT