சேலம்

குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது

DIN

வாழப்பாடி அருகே இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பெரியண்ணன் (46). இவா் அதே பகுதியைச் சோ்ந்த இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதையறிந்த குழந்தையின் பெற்றோா் சிறுமியை அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளி பெரியண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT