முகப்பு
சேலம்

இடங்கணசாலை நகராட்சியில் தூய்மைப் பணிகள் ஆய்வு

 இடங்கணசாலை நகராட்சியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகளை நகராட்சித் தலைவா் பி. ஜி. கமலக்கண்ணன், ஆணையாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

 இடங்கணசாலை நகராட்சியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகளை நகராட்சித் தலைவா் பி. ஜி. கமலக்கண்ணன், ஆணையாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது கவுன்சிலா்கள், துப்புரவு பணி மேற்பாா்வையாளா் இளங்கோ, சுகாதார ஆய்வாளா் நிருபன் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா். பணியை நேரில் ஆய்வு செய்த நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் கூறியதாவது:

இடங்கணசாலை நகராட்சி பகுதியில் தூய்மை பணியாளா்களால் ஒருங்கிணைந்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குப்பை இல்லா நகராட்சியாக உருவாக்கவும், பசுமை நிறைந்த நகராட்சியாக மாற்றவும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →