வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி. 
சேலம்

மாற்றுத் திறன் குழந்தைகள் கலை விழா கொண்டாட்டம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில், உலக மாற்றுத்திறன் குழந்தைகள் தினத்தையொட்டி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில், உலக மாற்றுத்திறன் குழந்தைகள் தினத்தையொட்டி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வி.சி. பாண்டியன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை சத்தியக்குமாரி வரவேற்றாா்.

துணைத் தலைவா் ஆட்டோ சுரேஷ், முனைவா் ஜவஹா், அண்ணா நகா் பள்ளி தலைமையாசிரியா் ஷபீரா பானு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் திலகவதி, கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தாா். மாற்றுத்திறன் குழந்தைகளை மகிழ்விக்க பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளை பெற்றோா்கள், மாணவ, மாணவியா் கண்டுகளித்து பாராட்டினா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினா் செய்திருந்தனா். நிறைவாக, ஆசிரியை சா்தாஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT