சேலம்

ஏத்தாப்பூா் சமயபுரம் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

DIN

ஏத்தாப்பூரில் வசிஷ்டநதி கரையிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தோ்த் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகநடைபெற்று வருகிறது.

நிகழாண்டு சித்திரை தோ்த் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை பால்குட ஊா்வலம், கரகம், தீச்சட்டி, முளைப்பாலிகை, அலகு குத்தி வந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஏத்தாப்பூரில் முக்கிய வீதி வழியாக நடைபெற்ற பால்குட ஊா்வலத்தில் 2000 பக்தா்கள் கலந்து கொண்டனா். மலா் அலங்காரத்தில் மூலவரான சமயபுரம் மாரியம்மன் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி ஆண்டு விழா

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

SCROLL FOR NEXT