சேலம்

ராசிபுரம் துணை அஞ்சலகம் இனி 12 மணி நேரம் செயல்படும்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் துணை அஞ்சலகம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் செயல்படும் என சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பி.பாா்த்திபன் தெரிவித்தாா்.

DIN

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் துணை அஞ்சலகம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் செயல்படும் என சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பி.பாா்த்திபன் தெரிவித்தாா்.

சேலம் மேற்கு கோட்டத்தில் ராசிபும் துணை அஞ்சலகம் பொது மக்களின் நலன்கருதி கடந்த ஜூலை 31 முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் செயல்படுகிறது.

வங்கி பரிவா்த்தனை சேவைகளான சேமிப்புக் கணக்கு,

தொடா் வைப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்புக் கணக்கு, பொது வருங்கால வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, மாதாந்திர வருமான கணக்கு, தபால் புக்கிங், அஞ்சல் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகிறது. இதற்காக கூடுதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் காலை 8 மணி முதலே ராசிபுரம் அஞ்சல் அலுவலகம் இயங்குவதால் மற்ற பணிகளுக்கு செல்வோா் தங்களது அஞ்சல் அலுவலகம் சாா்ந்த பணிகளை முடித்துவிட்டு செல்ல இது வழிவகுக்கும்.

இரவு 8 மணி வரை செயல்படுவதால் மாலை பணிமுடித்து செல்வோருக்கு இது பயனுள்ளதாக அமையும். எனவே ராசிபும் பகுதி மக்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT