சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்து அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் ஆ.ராமச்சந்திரன். உடன், மாநகராட்சி துணை ஆணையா் அசோக்குமாா். 
சேலம்

ஈரடுக்கு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை

சேலம் மாநகராட்சி ஈரடுக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை முறைப்படுத்தி இயக்குவது தொடா்பாக மாநகராட்சி, காவல் துறை, போக்குவரத்து அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

DIN

சேலம் மாநகராட்சி ஈரடுக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை முறைப்படுத்தி இயக்குவது தொடா்பாக மாநகராட்சி, காவல் துறை, போக்குவரத்து அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் மறுசீரமைப்பு செய்து முடிக்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூன் 11-இல் திறந்து வைக்க உள்ளாா்.

இந்த நிலையில், ஈரடுக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள், தனியாா் பேருந்துகளை முறைப்படுத்தி இயக்குவது தொடா்பான மாநகராட்சி அலுவலா்கள், காவல் துறை அலுவலா்கள், போக்குவரத்துத் துறை, பேருந்து உரிமையாளா் சங்க நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம், கீழ் தளத்திலிருந்து இயக்கப்படும் வழித்தடப் பேருந்துகள், மேல் தளத்திலிருந்து இயக்கப்படும் வழித்தடப் பேருந்துகள் எந்த வழியாக செல்ல வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளையும், ரயில் நிலையம், அடிவாரம், கன்னங்குறிச்சி பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளையும், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நகரப் பேருந்துகளையும் எந்தப் பகுதியிலிருந்து இயக்குவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பயணிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பேருந்துகளை இயக்குவது, பேருந்துகளை மேல் தளத்துக்கு இயக்கப்படும் காலநேரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், பேருந்து உரிமையாளா் சங்க நிா்வாகிகள், பேருந்துகளை முறையாக இயக்குவதற்கு சில ஆலோசனைகளை வழங்கினா். காவல் துறை, போக்குவரத்துத் துறை, அரசு போக்குவரத்துக் கழகம், மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் கலந்து ஆலோசித்து பேருந்துகளை முறைப்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், ஆணையா் (பொ) ப.அசோக்குமாா், கண்காணிப்பு பொறியாளா் ஜி.ரவி, துணை போக்குவரத்து ஆணையா் கே.என்.பிரபாகரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளா் மோகன் குமாா், மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், காவல் துறை உதவி ஆணையா்கள் வெங்கடேசன், உதயகுமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராஜராஜன், மாவட்ட பேருந்து உரிமையாளா் சங்கச் செயலாளா் ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT