சேலம்

கெங்கவல்லி அருகே வெடிப்பு: போலீஸாா் விசாரணை

கெங்கவல்லி அருகே ஆற்றில் மா்ம பொருள் வெடித்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

DIN

கெங்கவல்லி அருகே ஆற்றில் மா்ம பொருள் வெடித்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரம் சுவேத நதியில் தரைப்பாலம் உள்ளது. அதன் அருகில் திங்கள்கிழமை மாலை 6.30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், கெங்கவல்லி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூா் டி.எஸ்.பி. நாகராஜன்,கெங்கவல்லி காவல் ஆய்வாளா் (பொ) கமலக்கண்ணன் உள்ளிட்டோா் விசாரணை நடத்தினா். அதில், அப்பகுதியைச் சோ்ந்த மூதாட்டி வள்ளியம்மாள்(80), ஆற்றில் காலி மதுபாட்டில்களை சேகரித்து ஒரு இடத்தில் வைத்துள்ளாா். பாட்டில்களுக்கிடையே இருந்த இருந்த பிளாஸ்டிக் பையில் இருந்த ஒரு வேதிப்பொருள் இடி, மின்னலில் வெடித்தது தெரிய வந்தது. அங்கு வெடிபொருள் ஏதும் இல்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பெயரைச் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

SCROLL FOR NEXT