சேலம்

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிப்பு

Din

சேலம் - விருத்தாசலம் இடையேயான ரயில் சேவை கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சேலம் - விருத்தாசலம் இடையேயான ரயில் சேவை அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதல் கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நெய்வேலி, வடலூா், குறிஞ்சிப்பாடி வழியாக இரவு 10.25 மணிக்கு கடலூா் துறைமுகத்தை அடையும்.

மறுமாா்க்கத்தில், கடலூா் துறைமுகத்தில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில், விருத்தாசலம், அயோத்தியாப்பட்டணம் வழியாக காலை 9.05 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT