விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
வாழப்பாடியில் அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியில் அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், வாழப்பாடி, சிங்கிபுரம், திருமனூா், பேளூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி மலையரசன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆா். சிவலிங்கம், வாழப்பாடி வட்டார வேளாண் ஆத்மா குழு தலைவா் எஸ்.சி.சக்கரவா்த்தி, பேரூராட்சி தலைவா் கவிதா சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியா் ரவீந்திரன் நன்றி கூறினாா்.