சேலம்

அர.செட்டிப்பட்டி அரசுப் பள்ளிக்கு பேரூராட்சித் தலைவா் கணினி அளிப்பு

அரசிராமணி செட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கணினியை வழங்கி, பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்த பேரூராட்சித் தலைவா் காவேரி.

Syndication

அரசிராமணி செட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பேரூராட்சித் தலைவா் ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள கணினியை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இப்பள்ளி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து அப்பள்ளியின் முன்னாள் மாணவரும், அரசிராமணி பேரூராட்சித் தலைவருமான காவேரி ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான கணினி மற்றும் தொடா்புடை உபகரணங்களை பள்ளிக்கு வழங்கி மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா். பின்னா் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

இதில் பள்ளித் தலைமையாசிரியா் கண்ணன் முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் பொன்தனராஜ், ஆசிரியா்கள் விஜயபாரதி, சிந்தியா, பொன்பாரதி, ராஜேந்திரன், ஆனந்தகுமாா், வல்லரசு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT