ஆத்தூா் காமராஜனாா் சாலை முதல் குடகு வரை மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 1.80 லட்சத்தில் சாலை விரிவாக்கப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஆத்தூா் நகராட்சி 26 ஆவது வாா்டு பகுதியில் தம்மம்பட்டி பிரதான சாலை செல்லும் ஆத்தூா் காமராஜனாா் சாலை முதல் குடகு வரை சுமாா் 2.3 கி.மீ. தூரம் தாா்ச்சாலையை அகலப்படுத்தும் பணியை நகா்மன்ற உறுப்பினா் ஆா்.கே.தேவேந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
இதில் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனா்.