சேலம்

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது: கி. வீரமணி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

Syndication

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆத்தூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி மாற்றம் செய்வது கண்டிக்கத்தக்கது. இத்திட்டத்திற்கு புதிதாக புரியாத ஒரு பெயரை வைப்பது தேசத் தந்தையான காந்தியை அவமதிப்பதாகும். காலப்போக்கில் ரூபாய் நோட்டில் உள்ள காந்தியின் படத்தை மாற்றுவதற்கான முயற்சியும் நடைபெறும் என்றாா்.

திராவிடா் கழகத்தைச் சோ்ந்த ஆத்தூா் தங்கவேல் (104) கடந்த வாரம் வயது மூப்பின் காரணமாக காலமானாா். அவரது உருவப்படத் திறப்பு விழாவிற்கு வந்த கி. வீரமணி, ஆத்தூா் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிதி அளிப்பு விழாவில் கலந்துகொண்டாா். அப்போது, ஆத்தூா் சாா்பில் ரூ. 10 லட்சம் நிதி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம், மதிமுக மாவட்டச் செயலாளா் வ. கோபால்ராசு, திராவிடா் கழக மாவட்ட காப்பாளா் த.வானவில், காங்கிரஸ் கமிட்டி பொருளாளா் ஆா். ஓசுமணி, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் அ. சுரேஷ், மாவட்ட காப்பாளா் ரா. விடுதலைச் சந்திரன், நகரத் தலைவா் வெ. அண்ணாதுரை, மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெயராமன், திமுக நகரச் செயலாளா்கள் கே. பாலசுப்ரமணியம், ஏ.ஜி. ராமச்சந்திரன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் என்.பி. வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில பொறுப்பாளா் க. செம்முகில், மாவட்ட பிரதிநிதி ஜெ. ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT