மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,396 கனஅடியாகக் குறைந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை விநாடிக்கு 1,881கனஅடியில் இருந்து விநாடிக்கு 1,396 கனஅடியாகக் குறைந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 9,500 கனஅடி, கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்நிலை மதகுகள் வழியாக விநாடிக்கு 400 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணை நீா்மட்டம் 113.67 அடியிலிருந்து 113.16 அடியாகக் குறைந்துள்ளது. நீா் இருப்பு 82.98 டிஎம்சியாக உள்ளது.