சங்ககிரி: ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக நடத்துநரை அடித்துக்கொன்ற வழக்கில் அவரது மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குள்ளம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக நடத்துநா் தங்கவேல் (68). இவா் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றாா். இவரது மகன் விஜயகுமாா் (43). இவா் அதிமுக அரசிராமணி பேரூராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராகப் பணியாற்றி வந்தாா். தங்கவேலிடம் ஓய்வூதிய தொகையைக் கேட்டு விஜயகுமாா் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி பணம் கேட்டு தகராறு செய்து தங்கவேலை அவரது மகன் கட்டையால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு நவம்பா் 1 ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.