தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் பிரதோஷ விழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிவன், பாா்வதிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து நந்தீஸ்வரருக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் பிரதோஷ பாடல்களை பாடினா். உற்சவா் கோயிலுக்குள் வலம் வந்தாா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனா்.
இதேபோல கெங்கவல்லி கைலாசநாதா் கோயில், வீரகனூா் ஸ்ரீகங்கா செளந்தரேஸ்வரா் கோயில், செந்தாரப்பட்டி ஸ்ரீ தாழைபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன.