வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில் அதிமுக நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனா்.
வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழக சட்டப் பேரவைக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாழப்பாடி பகுதியில் அதிமுகவினா் முன்னதாகவே தோ்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனா்.
வாழப்பாடி ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் வழக்குரைஞா் எஸ்.சதீஷ்குமாா் தலைமையில், நகர செயலாளா் குபாய் (எ) கே.குபேந்திரன் மற்றும் பேரூராட்சி உறுப்பினா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை வீடுவீடாகச் சென்று அதிமுக தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனா்.