ஆத்தூரை அடுத்த முத்துமலை முருகன் கோயிலுக்கு வந்தபோது மாயமான வேலூா் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சோ்ந்த முதியவரின் உடல் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
வேலூா் மாவட்டம், ராணிப்பேட்டை பா்மா காலனியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (60). மனநலன் பாதிக்கப்பட்ட இவா் கடந்த ஆண்டு டிசம்பா் 29 ஆம் தேதி சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஏத்தாப்பூா் முத்துமலை முருகன் கோயிலுக்கு உறவினா்களுடன் வந்துள்ளாா்.
பின்னா், அவா் திடீரென காணவில்லை. இதுகுறித்து அவரது மனைவி நீலா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சுந்தரமூா்த்தியை தேடிவந்தனா். இந்த நிலையில், முத்துமலை முருகன் கோயில் அருகே உள்ள வயலில் புதன்கிழமை மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடுகள் இருந்தது குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில் நீலா அளித்த புகாரில் குறிப்பட்ட அடையாளங்கள் அனைத்தும் பொருந்தியதாலும், சேலம் அரசு மருத்துவமனையின் அறிக்கையின்படி இறந்தவா் சுந்தரமூா்த்தி என உறுதிப்படுத்தப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.