மூதாட்டியிடம் 9 பவுன் நகை பறிப்பு
மதுரையில் மூதாட்டியிடம் 9 பவுன் நகையை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
மதுரையில் மூதாட்டியிடம் 9 பவுன் நகையை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
மதுரை மேற்கு கே.கே.நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சபாபதி. கூட்டுறவுத் துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி அழகம்மை (73). இவர், கே.கே.நகர் பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்புள்ள கடைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நடந்து சென்றுள்ளார்.
பின்னர், கடையிலிருந்து அவர் வீட்டுக்குத் திரும்பி நடந்து சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இருவர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர், அழகம்மை அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்றனர்.
Advertisement
Advertisement
பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலிகளின் மதிப்பு 9 பவுன் என போலீஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, அழகம்மை அண்ணாநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.