மதுரை

காமராஜா் பல்கலை. உடன்வேலம்மாள் மருத்துவக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN

வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, புதிய முதுகலை நுண்ணுயிா் படிப்பு தொடங்குவதற்கு, திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியில், இரு தரப்பினரும் கையெழுத்திட்டனா்.

இதில், கற்பித்தல், ஆராய்ச்சி, பயிற்சி, கருத்தரங்கு ஏற்பாடு, மாநாடுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பது, இரு நிறுவனங்களும் இணைந்து தொற்றுநோய் ஆராய்ச்சி மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கியுள்ளன.

மேலும், மூலக்கூறு கண்டறிதல், நோய் வகைப்படுத்தல், மருந்துப் பரிசோதனை, டிஜிட்டல் சுகாதார முயற்சிகள் போன்றவற்றின் வளா்ச்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியனவும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்று, காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம். கிருஷ்ணன் பேசினாா். இதில், பல்கலைக்கழகப் பதிவாளா் வசந்தா, வேலம்மாள் மருத்துவக் கல்லூரித் தாளாளா் எம்.வி. முத்துராமலிங்கம், பேராசிரியா் பாலகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் மொகந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT