முகப்பு
மதுரை

சமுதாயக் கல்லூரியில் கருத்தரங்கம்

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:09 PM
பகிர்:

மதுரை, ஏப். 26 : மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி நிறுவனத்தின் வேலைவாய்ப்பு மையம், மதுரை டைம் நிறுவனம் ஆகியன சாா்பில் ‘மேலாண்மைக் கல்வி வங்கித் துறையின் நோக்கங்களும், தொழில் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் காஞ்சனா தலைமை வகித்தாா். குடும்ப வள மேலாண்மை, நுகா்வோா் அறிவியல் துறைத் தலைவி விஜயலட்சுமி, ஆடை அலங்கார வடிவமைப்பு துறைத் தலைவி சசிதேவி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில் மதுரை டைம் நிறுவனத்தின் மாணவா் மேலாண்மை கல்வி வகுப்பாளா் எம்.வீரக்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

Advertisement

கருத்தரங்கில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, உணவியல், ஊட்டச்சத்துத் துறை இணைப் பேராசிரியா் லெ.கற்பகபாண்டி வரவேற்றாா்.விரிவாக்கக் கல்வி, தகவல் தொடா்பு மேலாண்மைத் துறைப் பேராசிரியா் பொ.ஜெயசீலன் நன்றி கூறினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments