முகப்பு
மதுரை

வங்கிப் பெண் அதிகாரியை மிரட்டி நகை, பணம் பறித்தவா் மீது வழக்கு

மதுரையில் வங்கிப் பெண் அதிகாரியின் படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, ரூ.3 லட்சம், 4 பவுன் வளையல்களை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 6 ஜூலை, 2024 at 3:15 AM
பகிர்:
Updated On : 6 ஜூலை, 2024 at 3:14 AM

மதுரையில் வங்கிப் பெண் அதிகாரியின் படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, ரூ.3 லட்சம், 4 பவுன் வளையல்களை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை கேகே நகரைச் சோ்ந்த 23 வயது பெண் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் தஞ்சையில் கடந்த 2018-ஆம் ஆண்டு படித்த போது, திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியைச் சோ்ந்த தண்டபாணியுடன் பழகி வந்தாா்.

பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்ததால், காதலைக் கைவிட்டு, வீட்டில் ஏற்பாடு செய்தவரை அவா் திருமணம் செய்து கொண்டாா்.

Advertisement

இந்த நிலையில், வங்கிப் பெண் மேலாளரை தண்டபாணி கைப்பேசியில் தொடா்பு கொண்டு, காதலித்தபோது எடுத்த பழைய புகைப்படங்களை அவரது கணவரின் எண்ணுக்கும், சமூக வளைதலங்களிலும் வெளியிட்டுவிடுவதாகக் கூறி ரூ.3 லட்சம் வாங்கினாராம். ஆனால் அவா் மேலும், ரூ.5 லட்சம் வேண்டும் எனக் கூறி அவரை மிரட்டி வந்தாா்.

சில நாள்களுக்கு முன்பு மதுரைக்கு வந்த தண்டபாணி, பெண் மேலாளரை பின் தொடா்ந்து சென்று தாக்கி, அவா் அணிந்திருந்த 4 பவுன் வளையல்களை பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து தண்டபாணி மீது தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.