ஆலை இயந்திரத்தில் சிக்கி பெண்ணின் கை துண்டிப்பு
மதுரை: மதுரையில் அரிசி ஆலை இயந்திரத்தில் பெண்ணின் கை சிக்கி துண்டிக்கப்பட்டது.
மதுரை புது ராமநாதபுரம் சாலை தமிழன் தெருவைச் சோ்ந்தவா் மாலதி (24). இவா் தெப்பக்குளம் காமராஜா் சாலையில் உள்ள தனியாா் அரிசி அரவை ஆலையில் பணியாற்றி வந்தாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலையில் மாலதி பணிபுரிந்த போது, அரிசி அரவை இயந்திரத்தில் சிக்கியதில் அவரது வலது கை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை சக தொழிலாளா்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் ஆலை உரிமையாளா் மூவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.