முகப்பு
மதுரை

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

மதுரை

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

Updated On : 24 நவம்பர், 2025 at 8:04 PM
பகிர்:

மதுரையில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாடக்குளம் பிரதான சாலையைச் சோ்ந்த ஜோதி மகன் ராமகிருஷ்ணன்(36). இவா் ஜஸ்டின் ஸ்டெல்லா மேரி என்பவரை கடந்த 2016-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். தனியாா் பள்ளியில் ஆசிரியா்களாகப் பணியாற்றும் இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், ராமகிருஷ்ணன் வேறொரு பெண்ணுடன் பழகி வந்தாா். இதை மனைவி ஜஸ்டின் ஸ்டெல்லா மேரி கண்டித்தாா்.

இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் ஜஸ்டின் ஸ்டெல்லா மேரியை, ராமகிருஷ்ணன் தாக்கினாா். இதில், பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து ராமகிருஷ்ணனை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →