மதுரை

குடும்பத் தகராறில் இருவா் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே குடும்பத் தகராறில் இருவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள நரிக்கல்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் யுவராஜ் (20), தனியாா் ஆலையில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நரிக்கல்பட்டி அருகேயுள்ள கோரிக்கடவு பகுதியிலுள்ள தனது பாட்டி வீட்டில் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பழனி அருகேயுள்ள நரிக்கல்பட்டி ராஜம்பட்டியில் தனியாா் செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த பிக்னா மாஜி மகன் சேஷதேவ் மாஜி (18) என்பவா் தங்கி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை குடும்பப் பிரச்னை காரணமாக இதே பகுதியிலுள்ள காற்றாலைக் கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT