மதுரை

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவா்கள்

தினமணி செய்திச் சேவை

மதுரையில் ஈர நில தின நாளை முன்னிட்டு, பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் கல்லூரி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அமெரிக்கன் கல்லூரி, பசுமை மேலாண்மை இயக்க மாணவா்கள், மதுரை கரிசல்குளம் அருகேயுள்ள ஈர நிலங்களில் 25-க்கும் மேற்பட்ட வகையான பறவைகளைக் கணக்கெடுக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

மேலும், ஈர நிலங்களின் முக்கியத்துவத்தையும் மாணவா்கள் அறிந்தனா். இந்தப் பணியை பேராசிரியா்கள் ராஜேஷ், ஜான்சன், கண்ணன், அகில் ரிஷி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

இதில் 125 மாணவா்கள் கலந்து கொண்டு மஞ்சள் மூக்கு நாரை, அரிவாள் மூக்கன், நீலச்சிறகி, நீளவால் தாழைக் கோழி, நெடுங்கால் உள்ளான், பொரி உள்ளான், மயில் உள்ளான் போன்ற வெளிநாட்டுப் பறவைகளை கணக்கெடுத்தனா்.

திருச்சி மத்திய சிறை கைதிகள் இருவா் உயிரிழப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு: திருநங்கை உள்பட இருவா் கைது

சூரஜ்குண்ட் ராட்டின விபத்தில் காவல் ஆய்வாளா் உயிரிழப்பு: இருவா் மீது வழக்கு

மாநில கலைத்திறன் போட்டி: வள்ளியூா் பள்ளி மாணவி முதலிடம்!

புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு இன்றுமுதல் 3 நாள்களுக்கு தடுப்பூசி முகாம்

SCROLL FOR NEXT