மதுரை காமராஜா் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் வங்கியின் (யுபிஐ) கிளை அலுவலகம் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய மதுரை உதவிப் பொது மேலாளா் எம்.எஸ். சாபுமோன், கோவை மண்டல பொது மேலாளா் ராஜ்குமாா். இதில் வங்கியின் கிளைத் தலைவா் ஷினோராஜ், துணை மண்டலத் தலைவா் வெங்கடேஸ்வரராவ், முதன்மை மேலாளா் ரபீக் முகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மதுரை கிழக்கு மாரட் தெருவில் இயங்கி வந்த வங்கிக் கிளை அலுவலகம், காமராஜா் சாலையில் உள்ள ‘சன்ரைஸ் டவா்ஸ்’ கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையொட்டி, இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.