மதுரை பாத்திமா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். உடன், பேராசிரியா்கள் உள்ளிட்டோா்.  
மதுரை

பாத்திமா கல்லூரியில் வினாடி-வினா போட்டி

தினமணி செய்திச் சேவை

மதுரை பாத்திமா கல்லூரியில் 18 கல்லூரிகளுக்கு இடையிலான வினாடி-வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவாற்றல், தனித்துவத்தை வெளிப்படுத்தினா்.

அமெரிக்கன் கல்லூரியின் காட்சித் தொடா்பியல் துறை உதவிப் பேராசிரியை ஆா். அகிலாலட்சுமி போட்டி நடுவராகச் செயல்பட்டாா். இதில் சிறந்த திறனை வெளிப்படுத்திய அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகள் முதல் பரிசையும், சுழல் கோப்பையையும் வென்றனா்.

இந்த நிகழ்வில் பாத்திமா கல்லூரிச் செயலா் இக்னேசியஸ் மேரி, கல்லூரி முதல்வா் பாத்திமா மேரி, வினாடி-வினா குழு இயக்குநா் பிந்து ஆண்டனி, மேக்தலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை பேராசிரியா் ஜோ. சகாய பவுலின், வினாடி-வினா பேராசிரியா் குழுவினா் செய்தனா்.

சட்டவிரோத குடியேற்றத்துக்கு முடிவு! பிரதமா் மோடி திட்டவட்டம்!!

நிசாா் செயற்கைக்கோள் மூலம் 12 நாள்களுக்கு ஒருமுறை மண் ஈரப்பத தரவுகள்: இஸ்ரோ

திமுக அரசை கண்டித்து அதிமுக, கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

அஜீத் பவார் மரணம்: விமான விபத்து விசாரணை தொடர்பாக அமித் ஷாவுக்கு ரோஹித் பவார் கடிதம்!

தமிழகத்தில் தே.ஜ.கூட்டணியில் 10 தொகுதிகள் கேட்டுள்ளோம்: இந்திய குடியரசு கட்சி தலைவா் ராம்தாஸ் அதாவலே

SCROLL FOR NEXT