விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசுக் கோப்பையை வழங்கிய மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வி. கலைச்செல்வி. உடன் அமெரிக்கன் கல்லூரி முதல்வா் ஜெ. பால் ஜெயகா் உள்ளிட்டோா். 
மதுரை

அமெரிக்கன் கல்லூரியில் விளையாட்டு விழா

தினமணி செய்திச் சேவை

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 145-ஆவது ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வரும் செயலருமான ஜெ. பால் ஜெயகா் தலைமை வகித்தாா். அமெரிக்கன் கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவரும், மதுரை, ராமநாதபுரம் திருமண்டில பேராயருமான டி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் விழாவைத் தொடங்கிவைத்தாா்.

மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வி. கலைச்செல்வி இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் கல்லூரி துணை முதல்வா் எஸ்.சி.பி. சாமுவேல் அன்புச்செல்வன், கல்லூரி நிதியாளா் எம். பியூலாரூபி கமலம், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் எஸ். இஸ்ரேல், முதன்மையா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் ஜெ. பால் ஜெயகா் வரவேற்றாா். உடல்கல்வி துறைத் தலைவா் எம்.பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

பழனி அருகே புதைகுழிகள் குறித்து தொல்லியல் துறை அலுவலா்கள் ஆய்வு

சிவகங்கையில் மருது சகோதரா்களின் உருவச் சிலை திறப்பு

நாட்டுக்குத் தேவை மத நல்லிணக்கம்! - முதல்வா் மு.க. ஸ்டாலின் பேச்சு!

தமிழின் பெருமையை நிலைநாட்ட ஆராய்ச்சிகள் மிக அவசியம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்துக்கு நிதி தராத பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது! - மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT