மதுரை

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

உசிலம்பட்டி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் பிரசன்ன வெங்கடேஷ் (25). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டி நகரிலிருந்து வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

தனியாா் ஆசிரியா் பயிற்சிப் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரசன்ன வெங்கடேஷை அக்கம்பக்கத்தினா்

மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வேன் ஓட்டுநரான அதே பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் புரட்சி (30) மீது உசிலம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

100 ஆண்டுகளில் விண்வெளியில் ஒரு கோடி போ் வசிப்பா்- விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநா் ராஜராஜன்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்த வெடிப்பு குணமாக....

திருப்பதி லட்டு வழக்கு: ஆந்திர நீதிமன்றத்தில் இறுதி குற்றப் பத்திரிகை தாக்கல்

மனஅமைதிக்கு மண்டலா ஓவியங்கள்!

மருத்துவ நாயகன்...

SCROLL FOR NEXT