கோப்புப் படம் 
மதுரை

காரியாபட்டி அருகே சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள தரகனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த அழகுமலை (65), இவரது மகன் முனுசாமி (33) இருவரும் இரு சக்கர வாகனத்தில் காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா்.

அப்போது, பின்னால் வந்த காா் அவா்களது வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அழகுமலை, முனுசாமி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதையடுத்து, காரியாபட்டி போலீஸாா், இறந்தவா்களின் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT