திண்டுக்கல்

பழனிக்கு சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி வருகை

DIN

பழனிக்கு சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் ஜகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த சுவாமிகள் சனிக்கிழமை மாலை வருகை புரிந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் ஜகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த சுவாமிகள் சனிக்கிழமை மாலை கொடைக்கானலில் இருந்து பழனிக்கு வருகை புரிந்தார். அவருடன், ஸ்ரீசன்னிதானம் விதுசேகர சுவாமிகளும் வந்திருந்தார். பழனி அடிவாரம் சித்தனாதன் மடத்துக்கு வந்திருந்த சுவாமிகளுக்கு, ஸ்ரீபாதúஸவா சமிதி சார்பில், ரமேஷ்குமார் ஸர்மா, ஹரிஹரமுத்து அய்யர், பாலசுப்ரமண்ய சிவாச்சார்யார் மற்றும் வைத்யநாதன் உள்ளிட்டோர் கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர்.
இங்கு, தூளிபாத பூஜை நடைபெற்ற பின்னர், சுவாமிகள் சிறப்புரை நிகழ்த்தினார். அதில், உலக நலனுக்கு பகவானுக்கு பூஜை செய்வது அவசியம். பரோபகாரம் என்பது பெரிய விஷயம். மனிதன் நல்லது செய்தால் அவனுக்கு புண்ணியம் கிடைக்கும். புண்ணியம் என்றால் பிறருக்கு நன்மை செய்வது. அதேபோல், பாவம் செய்தால் அவனுக்கு தண்டனை கிடைக்கும்.
பகவானை தினமும் நினைத்து வணங்குவது அவசியமாகும். பழனி தண்டாயுதபாணி சுவாமியை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்யும்போது, அனைவரின் நலனுக்கும் வேண்டுவேன்.
தண்டாயுதபாணி சுவாமிக்கு செய்யும் பூஜை மிகுந்த ஆத்ம திருப்தியை தரும் எனப் பேசினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, வருத்தமில்லா வாலிபர் சங்க நிர்வாகிகள் மதனம், மூர்த்தி, முருகனடிமை பாலசுப்ரமணிய சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT