திண்டுக்கல்

பழனி அருகே ஊராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

பழனியை அடுத்த தாமரைக்குளம் ஊராட்சியில் நடைபெறாத கிராம சபைக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறி  கையெழுத்து பெறப்பட்டதை கண்டித்து சனிக்கிழமை  பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பழனியை அடுத்தது தாமரைக்குளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் செய்துள்ளனர்.  இந்நிலையில் ஊராட்சி அலுவலகத்தில் செயலராக பணியாற்றி வருபவர் நூறுநாள் வேலை செய்பவர்களிடம்  கிராம சபைக் கூட்டம் நடைபெற்றதாக கடிதம் தயார் செய்து அதில் கையெழுத்து பெற்றதாக புகார் எழுந்தது.  இதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த  பலர் சனிக்கிழமை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊராட்சி செயலர் அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT