கொடைக்கானலில் கடைகளின் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு
கொடைக்கானலில் வியாழக்கிழமை கடைகளின் பூட்டுகளை உடைத்து பொருள்கள் திருடப்பட்டதாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானலில் வியாழக்கிழமை கடைகளின் பூட்டுகளை உடைத்து பொருள்கள் திருடப்பட்டதாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானலிலுள்ள சுற்றுலா இடமான பசுமைப் பள்ளத்தாக்குப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமாக 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 10-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து அங்கிருந்த பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் கடையிலிருந்த பணம் உள்ளிட்ட பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் இருக்கும். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அங்கு சென்ற போலீஸார் அந்த கடைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.