செம்பட்டி அருகே பைக் மோதி இளைஞர் சாவு
செம்பட்டி அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செம்பட்டி அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செம்பட்டி அடுத்துள்ள சித்தையன்கோட்டை சேடபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் முருகேசன் (30). இவர் சனிக்கிழமை செம்பட்டி- வத்தலகுண்டு சாலை லட்சுமிபுரம் அருகே நடத்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைத்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.