ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி
ஜன நாயகன் திரைப்படத்தை இணையளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் கைதான 9 பேரின் ஜாமின் மனுவை நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.
ஜனநாயகன் திரைப்படத்தை இணையளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் கைதான 9 பேரின் ஜாமின் மனுவை நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது அவர் இந்த உத்தரவை பிறப்பித்துளளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் முழுத் திரைப்படமும் கடந்த ஏப். 10ஆம் தேதி இணையத்தில் வெளியானது.
படத் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவு போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு, அவா் நடித்த கடைசிப்படமாக ஜன நாயகன் அமைந்தது.
Advertisement
பொங்கல் விடுமுறையை இலக்கு வைத்து, ஜனவரியில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், இந்தத் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு படம் வெளியாகும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், இணையத்தில் முழுப் படமும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
The court on Saturday rejected the bail pleas of 9 people arrested in connection with the online release of the film Jana Nayagan.