திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் சாலை விபத்தில் சிறுவன் சாவு

DIN

ஒட்டன்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் கீழே விழுந்தவர்கள் மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தார்.
 பழனி பெரியபள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ஹக் (52). இவர், தனது மனைவி அபிநிஷா (38) மகன் ஹைதர் அலி (11)  ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்தார். 
பழனி- ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தன்னாசியப்பன் கோயில் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் நிலைதடுமாறி மூவரும் சாலையில் விழுந்தனர். 
அப்போது பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த மினி லாரி அவர்கள் மீது மோதியதில் சிறுவன் ஹைதர் அலி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
பலத்த காயமடைத்த அப்துல்ஹக், அபிநிஷா ஆகியோர் பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT