லாரி மீது சொகுசுப் பேருந்து மோதல்: 5 பேர் காயம்
நத்தம் அருகே திங்கள்கிழமை நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசுப் பேருந்து மோதியதில், 5 பேர் காயமடைந்தனர்.
நத்தம் அருகே திங்கள்கிழமை நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசுப் பேருந்து மோதியதில், 5 பேர் காயமடைந்தனர்.
கோவையிலிருந்து, திண்டுக்கல், நத்தம் வழியாக காரைக்குடிக்கு திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்தில் 42 பேர் பயணம் செய்தனர். இப்பேருந்து நத்தம் அடுத்துள்ள அம்மாபட்டி விலக்கு அருகே சென்றபோது, செங்கல் பாரத்துடன் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது.
இதில், பேருந்தில் பயணம் செய்த காரைக்குடியைச் சேர்ந்த விஜய்கார்த்திக் (40), தேவகோட்டை அடுத்துள்ள தத்தனியைச் சேர்ந்த கலா (31), கனிஷ்கா (13), பானுப்பிரியா (22), ஹரிணி (8) ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து இவர்கள் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் விஜய்கார்த்திக் மட்டும் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இவ்விபத்து குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.