திண்டுக்கல்

கூட்டுறவு வார விழா ஆலோசனைக் கூட்டம்

DIN

திண்டுக்கல் மண்டலத்தில் 65ஆவது கூட்டுறவு வார விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில்  சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் நவ.14 முதல் 20ஆம் தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.குமார் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது
  இக் கூட்டத்துக்கு, துணைப் பதிவாளர்கள் கோ.பாலசுப்பிரமணி, டேனியல் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 65ஆவது கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு, திண்டுக்கல் மண்டலத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் கொடி ஏற்றுதல், மரம் நடுதல், ரத்ததான முகாம், கருத்தரங்கம், உறுப்பினர் சந்திப்பு கூட்டம், விற்பனை மேளா,  கால்நடை சிகிச்சை முகாம் ஆகியவற்றை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதேபோல், பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT