திண்டுக்கல்

கொடைக்கானலில்பொது மக்கள் சாலை மறியல்

DIN


 கொடைக்கானலில் விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பொது மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை இரவு  இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கொடைக்கானலைச் சேர்ந்த பிரசாந்த், வினோத், நவீன் ஆகிய 3 பேரில்  2 பேர் இறந்தனர். 
 பலத்த காயமடைந்த நவீன் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந் நிலையில் பிரசாந்த்,வினோத் ஆகியோர்களின் சடலங்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய லாரியின் உரிமையாளர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்க வேண்டும் எனக் கூறி சுமார் 300-க்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல் ஆய்வாளர் ராஜசேகர் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT