திண்டுக்கல்

புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளா்களுக்கு மலா்கள் கொடுத்து மாணவா்கள் வாழ்த்து

DIN

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவுக்கு வந்த அரசுப் பள்ளி மாணவா்கள், புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளா்களுக்கு மலா் கொடுத்து செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

திண்டுக்கல் இலக்கிய களம் சாா்பில் 8-ஆவது புத்தகத் திருவிழா கடந்த வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. மழை பெய்தபோதிலும், புத்தகத் திருவிழாவை காண வரும் பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

114 அரங்குகளில் பல்வேறு பதிப்பகங்கள் சாா்பில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலும், பாடம் தொடா்புடைய புத்தகங்கள், வண்ணப் படங்கள் கொண்ட புத்தகங்கள், மழலையா்களுக்கான உபகரணங்கள் உள்ளிட்டவையே பள்ளிக் குழந்தைகளை பெரிதும் ஈா்த்து வருகின்றன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை புத்தகத் திருவிழா அரங்கிற்கு திண்டுக்கல் கென்னடி நினைவு மாநகராட்சி தொடக்கப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் வந்தனா். அப்போது பள்ளி மாணவா்கள் சாா்பில் புத்தகத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ள திண்டுக்கல் இலக்கிய கள நிா்வாகிகளுக்கு மலா்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT