திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே ரூ.6.80 லட்சம் பறிமுதல்

DIN

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்துள்ள குண்டலப்பட்டி பிரிவு பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா தலைமையிலான தேர்தல் பறக்கும்படைக் குழுவினர் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அணைப்பட்டி- நிலக்கோட்டை சாலையில் வந்த காரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அதில், உரிய ஆவணமின்றி ரூ.6.80 லட்சம் எடுத்துச் செல்லப்படுவது கண்டறியப்பட்டது. விசாரணையில், காரில் வந்தவர் விருவீடு அடுத்துள்ள சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த உதயக்குமார் என தெரிய வந்தது. நிலக்கோட்டையில் மதுபானக் கூடம் நடத்தி வரும் அவர், மதுபானக் கூட உரிமம் புதுப்பிப்பதற்காக பணத்தை எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ.6.80 லட்சத்தையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை நிலக்கோட்டை சார் நிலைக் கருவூலத்தில்  ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT