திண்டுக்கல்

குடிநீர் கோரி அமைச்சர் வீடு முற்றுகை

திண்டுக்கல்லில் குடிநீர் வழங்க கோரி வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் வீட்டை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர். 

DIN

திண்டுக்கல்லில் குடிநீர் வழங்க கோரி வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் வீட்டை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர். 
திண்டுக்கல் மாநகராட்சி 7ஆவது வார்டுக்குள்பட்ட சோலை இல்லம் தெருவில் 60க்கு மேற்பட்ட குடுபம்பங்கள் உள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். 
இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், ஆர்எம்.காலனியிலுள்ள வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வீட்டை புதன்கிழமை முற்றுகையிட்டனர். அமைச்சர் வீட்டில் இல்லாததால், அவரது மகன் ராஜ்மோகன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாநகராட்சி அலுவலர்களிடம் பேசி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவதாக உறுதி அளித்தார். இதனை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT