திண்டுக்கல்

மழை வேண்டி நத்தத்தில் பெண்கள் சிறப்பு வழிபாடு

நத்தம் பகுதியில் மழை பெய்ய வேண்டி பெண்கள் பால் குடம் எடுத்துச் சென்று மாரியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். 

DIN

நத்தம் பகுதியில் மழை பெய்ய வேண்டி பெண்கள் பால் குடம் எடுத்துச் சென்று மாரியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். 
  திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டி கோயில்கள் மற்றும் மசூதிகளில் வருண ஜெப யாகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், நத்தம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்துச் சென்று மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். 
   இதையொட்டி, நத்தம் அண்ணாநகர் பக்தர்கள் சார்பில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அங்குள்ள செல்வ விநாயகர் கோயிலிலிருந்து பால்குடத்துடன் ஊர்வலமாக செவ்வாய்க்கிழமை புறப்பட்டனர். இந்த ஊர்வலம் நத்தம் பேருந்து நிலையம், அரிசி கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து மாரியம்மன் கோயிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மழை வேண்டி அம்மனை வழிபட்டனர். 
  இதற்கான ஏற்பாடுகளை அண்ணாநகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT