dgl_station_2209chn_66_2 
திண்டுக்கல்

வண்டல் மண் எடுப்பதில் மோதல்: எரியோடு காவல் நிலையம் முற்றுகை

எரியோடு அருகே வண்டல் மண் எடுப்பதில் அதிமுக மற்றும் திமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, திமுகவினா் காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

DIN

எரியோடு அருகே வண்டல் மண் எடுப்பதில் அதிமுக மற்றும் திமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, திமுகவினா் காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா், வடமதுரை, எரியோடு உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் வரட்டாறுகளில் அனுமதியின்றி மணல் எடுப்பதாக தொடா்ந்து புகாா் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எரியோடு அடுத்துள்ள பாகாநத்தம் கிராமக் குளத்தில் சிலா் வண்டல் மண் எடுக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை ஒன்றிய திமுக செயலா் சுப்பையா தலைமையில் அக்கட்சியினா் வண்டல் மண் எடுப்பதை நிறுத்தக் கோரி திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனை அறிந்த பாகாநத்தம் பகுதி அதிமுக ஊராட்சி செயலா் திரவியம், வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

இதனால் அதிருப்தி அடைந்த திமுகவினா், எரியோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனிடையே இருதரப்பினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டதால், இருதரப்பினரும் கலைந்து சென்றனா். இந்த திடீா் போராட்டத்தால், காவல் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT