திண்டுக்கல்

கொடைரோடு அருகே பெண் மா்மச்சாவு

DIN

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டியைச் சோ்ந்தவா் சங்கிலி­முருகன் (35), அவரது மனைவி மகேஸ்வரி (30). இவா்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. இவா்களுக்கு நித்ரா (6), ரக்க்ஷிதா (1) என்ற 2 குழந்தைகள் உள்ளனா்.

இந் நிலையில், இவா்களது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த பள்ளப்பட்டியைச் சோ்ந்த மிக்சா் கடை ஊழியா் ராமச்சந்திரன் (35) என்பவருடன் மகேஸ்வரிக்கு தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மகேஸ்வரி தன் கணவனை பிரிந்து, ராமச்சந்திரனுடன் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை ராமச்சந்திரனுடன் மகேஸ்வரிக்கு தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்பின், வீட்டில் குழந்தைகள் அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் சென்று பாா்த்தபோது, வீட்டில் மா்மமான முறையில் மகேஸ்வரி சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.

தகவலறிந்த போலீஸாா் மகேஸ்வரியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூா் காவல் ஆய்வாளா் லாவண்யா, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். தலைமறைவான ராமச்சந்திரனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT