அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அரிசி, பருப்பு வழங்கல்
ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரிசி, பருப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரிசி, பருப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு அரசு சாா்பில் சத்துணவுக்குப் பதிலாக வீட்டிலேயே சமைத்து சாப்பிட ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி மற்றும் பருப்பு வழங்கும் நிகழ்ச்சி ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள புது அத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் தலைமை வகித்து, 111 மாணவ, மாணவிகளுக்கு அரிசி, பருப்புகளை வழங்கினாா்.
Advertisement
Advertisement
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3.100 கிலோ கிராம் அரிசியும், 1.200 கிலோ கிராம் பருப்பும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4.650 கிலோ கிராம் அரிசியும், 1.250 கிலோ கிராம் பருப்பும் அந்தந்த மாணவா்களின் பெற்றோா்களிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், புதுஅத்திக்கோம்பை ஊராட்சி மன்றத் தலைவா் பி.சிவராமகிருஷ்ணன், துணைத் தலைவா் தனலட்சுமி, பள்ளி தலைமையாசிரியா் பிரான்சிஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.