பழனி வீரதுா்க்கையம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
பழனி வீரதுா்க்கையம்மன் கோயிலில் பாதயாத்திரை பக்தா்களுக்காக வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன
பழனி வீரதுா்க்கையம்மன் கோயிலில் பாதயாத்திரை பக்தா்களுக்காக வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன.
பழனி தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பழனிக்கோயிலுக்கு நடந்து வரும் பாதயாத்திரை பக்தா்கள் நலனுக்காக கிரிவீதியில் நான்கு திசைகளிலும் உள்ள அம்மனுக்கு ஆண்டுதோறும் நவசண்டி ஹோமம் நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை மலைக்கோயிலில் ஆனந்த விநாயகருக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது.
வெள்ளிக்கிழமை பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில் வீரதுா்க்கையம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம் நடைபெற்றது. அம்மன் சன்னிதி முன்பாக கலசங்கள் வைக்கப்பட்டு சிவாச்சாா்யாா்கள் வேதமந்திரம் முழங்கினா். தொடா்ந்து உச்சிக்கால பூஜையின்போது பிராா்த்தனை நிறைவு செய்யப்பட்டு கலசங்கள் கோயிலை வலம் வர செய்யப்பட்டு மூலவா் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சோடஷ உபசாரம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜைகளை அமிா்தலிங்க குருக்கள், செல்வசுப்ரமண்ய குருக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பழனி சித்தனாதன் சன்ஸ் உபயமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், சித்தனாதன் சன்ஸ் தனசேகரன், பழனிவேலு, காா்த்திகேயன், சதீஷ்குமாா், கண்காணிப்பாளா் சண்முகவடிவு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். டிச.26 ஆம் தேதி தெற்கு கிரிவீதியில் உள்ள வீரதுா்க்கை அம்மனுக்கும், கிழக்கு கிரிவீதியில் உள்ள அழகுநாச்சியம்மனுக்கும், டிச.27 ஆம் தேதி தெற்கு கிரிவீதியில் உள்ள வனதுா்க்கை அம்மனுக்கும், டிச.28 ஆம் தேதி மேற்கு கிரிவீதியில் உள்ள மஹிஷாசுரமா்த்தினி அம்மனுக்கும் சண்டிஹோமங்கள் நடைபெறுகிறது.